ജി.എൽ.പി.എസ്. കേരംപാറ/சரித்தரம்

Schoolwiki സംരംഭത്തിൽ നിന്ന്


கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர் தாலூக்காவில் வடகரப்பதி எனும் ஊராட்சிக்குப் பெயர் போன ப்சாயத்தில் கீராம்பாறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள இந்த பள்ளிக்கூடம் DPEP யின் உதவியுடன் 2000 ஆண்டு june மாதம்"தொடங்கப்பட்டது.

1997−98 ம் ஆண்டு  வடகரபதி பஞ்சாயத்து மக்களின் வேண்டுதலை ஏற்று  ஒரு அரசு ஆரம்பப்பள்ளி அமைக்க DPEP Trainer திரு.பேச்சிமுத்து ஆசிரியர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையில் பாலக்காடு DPC அவா்களுக்கு வடகரபதி கிராமப்பஞ்சாயத்து முன்னால் தலைவர் திரு.ஆரோக்கியசாமி அவா்கள் தலைமையிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அன்று DPCஆக இருந்த"திருவாளா்.N.தியாகராஜன் அவா்கள் முன்கை எடுத்து, அன்றைய SPD ஆக இருந்த திருவாளா். சுரேஷ்குமாா். IAS  அவா்களுக்கு ஒரு வேண்டுகாளும் முக்கியத்துவத்தையும்  எடுத்துரைத்தார் கல்விக்கு வேண்டி இவ்வாறு கஷ்டப் படும் மக்களின் ஆர்வத்தை புரிந்து கொண்டு திருவாளர்.  SPD சுரேஷ் குமார் IAS அவர்கள் உடனே இப்பகுதியில் ஒரு கல்விக்கூடம்ஆரம்பிக்க ஏற்பாடும்,அனுமதியும் அளித்தார். மேலும் DPEP யின் fund  உபயோகித்து ஒரு கட்டிடமும் கட்டித்தருவதற்கான   அனுமதியும். அளித்தார்.

மேலும் இப்பள்ளிகூடம் கட்டுவதற்கான 1 ஏக்கர் நிலம் குறைந்த விலைக்கு அளிப்பதாகவும் கூறினார்.

அன்று இருந்த பெற்றோர்கள். பொது மக்கள் இப்பள்ளியின் பிரதிநிதித்துவம் தங்களுக்கும் வேண்டும். என்று கூறி பள்ளிக்கு இடம் வாங்கும் விலையில் பங்கு கொள்வதாக கூறினார்கள். திரு.அப்புச் சாமி கவுண்டர் அவர்களுக்கு ஒரு தொகையாக  ரூபாய். 50, 000 (ஐம்பது ஆயிரம் ) பெற்றுக் கொண்டு பள்ளிக்கு இடம் பெறப்பட்டது. 1 ஏக்கர் நிலம் பாலக்காடு RDO  அவர்களின "பெயரில் பதிவு  செய்யப்பட்டது. உடனே பாலக்காடு D.R.C  அவர்கள் பள்ளிக்கு கட்டிடம் கட்ட ருபாய் 5. 25,000 /ஒதுக்கீடு செய்தார்.  அதன் கீழ்

திரு. செல்வகுமாரசாமி கவுண்டர்

திரு. அப்புச்சாமி கவுண்டா்

திருமதி. அன்னம்மாள் அப்புச்சாமி கவுண்டா்

திரு.முத்தலிப்

திரு T.F.J.வின்சென்ட் ஆசிரியர்

PTA , MPTA

G UPS Mennpara

மேலே குறிப்பிட்டுள்ள அங்கங்கள் சேர்ந்து ஓர் VEC   கமிட்டி கூடி கட்டிடம் கட்ட துவங்கப்பட்டது.